#Beaking:ஜாக்கிரதை!மீண்டும் எகிறிய கொரோனா…கடந்த ஒரே நாளில் 2.82 லட்சம் பேர் பாதிப்பு;441பேர் பலி!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 441 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,79,01,241 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,961 ஆக உயர்வு.

  • கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 44,889 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,79,01,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 441 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,87,202 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,88,157 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,83,039 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,31,000 ஆக அதிகரித்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,58,88,47,554 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,35,229 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு:

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 8,891 ஆக இருந்த நிலையில்,தற்போது 8,961 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்