உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழர் திருநாளை பொங்கல் திருநாள் இன்று அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் – தமிழ் இனநாள் – பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்.

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம்!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்