#BREAKING: தமிழகத்தில் 14 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு ..!

Default Image

தமிழகத்தில் ஒரே நாளில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,978 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 13,990 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 32 பேர் என மொத்தம் 13,990 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,14,276 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனவால் மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,547 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,14,643 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 62,767 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்