அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Default Image

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வெளிநாட்டு விடுதியில் தங்கியுள்ள 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வெளிநாட்டு விடுதியில் தங்கியுள்ள 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் விடுதியிலேயே 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்