#Breaking:பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் படுகாயத்துடன் மீட்பு!

Default Image

விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்சோலை ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.மேலும்,வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் ஆலையில் சிக்கியதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து,தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே,ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்