#Breaking:மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை – முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த வல்லுநர் குழு!

Default Image

சென்னை:மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான வல்லுநர் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.இதன்காரணமாக,மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் விதமாகவும் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் போன்ற பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து முதற்கட்ட அறிக்கையை வல்லுநர் குழு,முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தற்போது தாக்கல் செய்துள்ளது.

அதன்படி,சென்னையில் தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில்,சென்னையில் மழை நீர் வடிகால்களை அகலபடுத்துவதுடன் ஆழப்படுத்த வேண்டும் எனவும்,வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்