கடந்த ஆண்டு 3,325 ரவுடிகள் கைது- டிஜிபி சைலேந்திர பாபு..!

Default Image

போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய கடிதத்தில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது.

இதயத்தில் எந்தக்கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் 2021-ல் ஆப்ரேசன் ரவுடி வேட்டை மூலம் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்