புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..!

Default Image

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டை  முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்கள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை:

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கல்ப்போர்ட் காவல்துறைஅதிகாரி கிறிஸ் ரைல் தெரிவித்தார். இந்த மோதலை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலர் ஓடுவதைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்