#Breaking:நாடு முழுவதும் ஒரே நாளில் 22,775 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 406 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,61,579 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக உயர்வு.

  • கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 6000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,61,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 406 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,81,486 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,949 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,75,312 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 1,04,781 ஆக உள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,45,16,24,150 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 58,11,487 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
  • மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக உயர்ந்துள்ளது.அதில் 488 பேர் குணமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்