#BREAKING: டெல்டா போல் பரவத் தொடங்கியதா ஓமைக்ரான்? – மத்திய அரசு

Default Image

டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல்.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை ஓமைக்ரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்த தகவலை கூறியுள்ளது. அதாவது, கொரோனா இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் எந்த அளவிற்கு வேகமாக பரவியதோ, இதற்காக மாற்றாக ஓமைக்ரான் பரவ தொடங்கியதாக கூறியுள்ளது.

டெல்டா வைரசுக்கு மாற்றாக தற்போது ஓமைக்ரான் வேகமாக உலகளவில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்திருந்த நிலையில், டெல்டா வைரஸ் பரவியதை போல ஓமைக்ரான் பரவும் நிலை எட்டி இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்