புத்தாண்டையொட்டி சென்னையில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு..!

Default Image

சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை

புத்தாண்டையொட்டி ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி1 அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை அன்று முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்