#BREAKING: விஜய் ஹசாரே கோப்பையை வென்ற இமாச்சல பிரதேசம்..!

Default Image

விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

இதில், தினேஷ் கார்த்திக் 116, இந்தரஜித் 80 ரன்கள் குவித்தனர். இறுதியாக தமிழக அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்கள் எடுத்தனர். ஹிமாச்சல பிரதேச அணியின் பந்துவீச்சில் ஜெய்ண்வால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பின்னர் களமிறங்கிய இமாச்சல பிரதேச அணி VJD முறையில் 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 299 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இமாச்சல பிரதேச அணியின் தொடக்க வீரர் சுபம் அரோரா 136* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 5 முறை சாம்பியனான தமிழக அணியை வீழ்த்தி இமாச்சல பிரதேசம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்