இயற்கையை சமூக அக்கறையோடு பாதுகாப்போம் – கனிமொழி எம்.பி

Default Image

சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியிருக்கும் மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வோம்.

சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள,தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள குறும்படத்தையும் முதல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கியிருக்கும் மீண்டும் மஞ்சப்பை என்ற பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்வோம். இயற்கையை சமூக அக்கறையோடு பாதுகாப்போம்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்