#BREAKING: திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ விபத்து!
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைக்கும் பணி தீவிரம்.
திருச்சியில் உள்ள காந்தி மார்கெட்டின் நுழைவு வாயிலில் சாலையோரம் உள்ள கடைகளில் பயங்க தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை மார்க்கெட்டில் உள்ள கடாயில் சிலிண்டர் வெடித்ததால் 5 கடைகள் எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றன.
ஒரு கடையில் பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவ தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.