எஸ்.ஐ.பூமிநாதனை கொன்ற மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

Default Image

எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் கடந்த 21-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளை எடுத்துச் செல்வதை பார்த்துள்ளார். அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் பூமிநாதன் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, கீரனூர் பள்ளப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து விசாரித்துள்ளார். அப்போது மணிகண்டன்(19) தன்னுடன் இருந்த இரண்டு சிறுவர்கள் உதவியோடு பூமிநாதனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து, திருமயம் கிளை சிறையில் உள்ள மணிகண்டனை, திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்