ஒரே நபரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 156 கற்கள்..! நடந்தது என்ன.?

Default Image

கர்நாடகாவில் பசவராஜ் என்பவற்றின் வயிற்றில் இருந்து 156 கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவர் ஒரு ஆசிரியர் ஆவார். இவருக்கு வயது 50. கடந்த சில நாட்களாக பசவராஜ் கடுமையான அடிவயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனைக்கு சென்று சோதித்தபோது அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தெலுங்கானாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பசவராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மூன்று மணி நேரம் லேப்ரோஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சையின் மூலம் 156 சிறுநீரக கற்களை அகற்றியுள்ளனர்.

மேலும் சிகிச்சைக்கு பின் நோயாளி நலமுடன் இருப்பதாகவும், அதிக எண்ணிக்கையிலான கற்கள் அகற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்