‘திமுக தான் பச்சை சங்கி’ – செருப்பை கழற்றி காட்டி ஆவேசமாக பேசிய சீமான்..!

Default Image

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் செருப்பை கழற்றி பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அண்மையில் யூடியூபர் ஒருவரின் கைதை எதிர்த்த்ததால், தன்னை சங்கி என்று பலரும் விமர்சித்ததாகவும், ஆனால், யூடியூபர் மீதான வழக்கு விவாதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு  வழக்கறிஞர் வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், யார்டா உண்மையான சங்கி? திமுக தான்டா பச்சை சங்கி, சொங்கி பயல்களா, யாராடா பார்த்து சங்கினு சொல்ற எனக்கூறி செருப்பை கழற்றி காட்டி பேசியுள்ள சம்பவம்  சர்ச்சையை கிளப்பியுள்ளது.  நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்