ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத் அருகே நிலநடுக்கம்..!

Default Image

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு 33 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.

இன்று ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இன்று அதிகாலை 3.47 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகருக்கு மேற்கே 33 கி.மீ தொலைவில் நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. முன்னதாக  கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அப்போது காலை 10.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பைசாபாத்தில் இருந்து 145 கி.மீ தொலைவில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் போதும் எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்