நிர்பயா திட்டம் – 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம்!

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் 2100 பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்தாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர் தெரிவித்திருந்தார். தற்பொழுதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர். நிர்பயா திட்டத்தின் கீழ் 2100 பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இத்திட்டத்தின் படி ஒரு பேருந்தில் 3 இடங்களில் கேமராக்களும் நான்கு பானிக் பட்டன்களும் பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Rebekal