திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் – மத்திய மந்திரி நிதின்!

Default Image

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

கட்டுமான சட்ட மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, நான் யார் மீதும் எந்த வித தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரும்பவில்லை.

ஆனால் அரசின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் தான் அதிகப் படியான திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும்,  திட்டங்களை முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுவது அரசின் கட்டமைப்பில் உள்ள பிரச்சனை தான் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்