அஷ்வினின் ‘கன்னி’ பேச்சு தியேட்டர்காரர்களை கதிகலங்க வைத்துள்ளதாம்.!?

Default Image

என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தின் பேசு பொருள் நம்ம குக் வித் கோமாளி அஸ்வின் தான். அந்தளவுக்கு வைச்சு செய்து கொண்டிருக்கின்றனர். இதெற்கெல்லாம் காரணம் அவர் நடித்துள்ள முதல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் அறியாமல் பேசிய கன்னி (முதல்) பேச்சுதான்.

அஸ்வின் நடிப்பில் முதன் முதலாக தயாராகி வரும் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இந்த திரைப்படத்தை ஹரிஹரன் எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின், ‘ எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். நான் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன். என்னை முழிக்க வைத்த ஒரே கதை இது தான். ‘என அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. இணைய வாசிகளுக்கு பெரும் தீனியாக அமைந்துவிட்டது. அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து, எனக்கு இதற்கு முன்னர் மேடை பேச்சு பேசியதில்லை என்பதால், பேசிவிட்டேன் என்பது போல கூறிவிட்டார். இருந்தும் நெட்டிசன்கள் விடுவதாயில்லை.

இந்த விஷயத்தை பார்த்த தியேட்டர் அதிபர்கள், விநோயோகிஸ்தர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அவர்கள் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் முதல் படம் என்பதால், இளைஞர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருக்கும் என நம்பி முக்கூட்டியே நல்ல விலை பேசி அட்வான்ஸ் வரை கொடுத்துவிட்டனராம்.

ஆனால், தற்போது அஸ்வினை வைச்சி செய்வதே அதே இளைஞர் கூட்டம் என்பதால், தியேட்டருக்கு கூட்டம் வருமா என அதிர்ந்து, தயாரிப்பு தரப்பிடம் படத்தை விலையை குறைக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்களாம்.

என்ன சொல்ல போகிறாய் அஸ்வினுக்கு கோலிவுட் ரசிகர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? இனி வரும் காலங்களிலாவது பாத்து சூதானமாக நடந்துக்கோங்க அஸ்வின் என இணையத்தில் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்