சென்னை தலைமைச் செயலகத்தின் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி..!

Default Image

சென்னை தலைமைச் செயலகத்தின் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ள தேசிய கொடி.

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.

 இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவை அனுசரிக்கும் விதமாக, தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி தற்போது அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்