ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- குடியரசுத்தலைவர் நிகழ்ச்சிகள் ரத்து..!

Default Image

மகாராஷ்டிராவில் இருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று மாலை டெல்லி திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத்புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள முப்படை தளபதி பிபின் ராவத் இல்லத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து பிபின் ராவத் மகளை சந்தித்து செல்கின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று மாலை டெல்லி திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்றுள்ள நிலையில், அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6:30 மணி அளவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை ஆலோசனையில்ஈடுபடவுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சக அமைச்சர்களிடம் எடுத்துரைக்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists