நாளை முதல் ஆஷஸ் தொடர்; இங்கிலாந்துக்கு பெரிய அடி ஆண்டர்சன் விலகல்..!

Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜாக் லீச் ஆகிய நான்கு பந்து வீச்சாளர்களில் ஒருவரை இங்கிலாந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ஆண்டர்சனுக்கு காயம் ஏதும் இல்லை என்றும்,  நேற்று  சுமார் ஒரு மணி நேரம் ஆண்டர்சன் நெட் பயிற்சி செய்தார். அவர் களத்தில் இறங்குவதற்கு தகுதியானவர் என்றும் உறுதி செய்துள்ளது. இருப்பினும், டிசம்பர் 16 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆண்டர்சன் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆஷஸ் 2019-ல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயமடைந்தபோது, அவர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் (632) மூன்றாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah