#BREAKING: இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

Default Image

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏழு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை மற்றும் குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், வங்கக்கடலில் புயல் வலுவிழந்து 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இரண்டு நாட்களுக்கு வடக்கு ஆந்திரா- ஒடிசா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்