தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது இதை செய்யாதீர்கள் – செல்வராகவன்

Default Image

தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என இயக்குனர் செல்வராகவன் ட்வீட்.

பாலியல் தொந்தரவு, தேர்வில் தோல்வி, மன உளைச்சல் போன்ற காரணங்களால், இன்று பலரும் தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில், நேற்று முன்னாள் நம்சுகாட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை  கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்