மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

Default Image

மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களின் நிதி ஆதாரங்களின் மூலம் ஆதரவற்ற, வயதான முஸ்லிம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மகளிர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் நிதி உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் துவங்கிட அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்