OYO நிறுவனத்தின் வியூகக் குழு ஆலோசகராக பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ராஜ்னிஷ் குமார் , குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள், ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்களின் செயல்பாடுகள் மற்றும் நிறுவனத்தின் பிராண்டை உலகளவில் வளர்ப்பதில் ஓயோவின் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவார் என்று ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
OYO இன் நிறுவனர் மற்றும் தலைவர் ரித்தேஷ் அகர்வால் கூறுகையில், “வியூகக் குழுவின் ஆலோசகராக ராஜ்னிஷ் குமாரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளில் அவரது அனுபவம் எங்களுக்கு முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.