சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி..!

Default Image

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி.

செங்கல்பட்டு  கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்..  சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்ஸோ வழக்கில் ஏற்கனவே இரண்டில் ஜாமீன் பெற்றுள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு 2வது முறையாக போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்