சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்..!

Default Image

சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள். 

பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், மழைநீரும்  நிற்கிறது. இதனால் வாகன  பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால், தலைநகர் பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கேம்பல் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை செப்பனிட வலியுறுத்தி, பாரதிநகரில் வசிக்கும் மக்கள் நூதன முறையில் கோரிக்கையை முன்வைத்தனர்.

அந்த வகையில், நீருடன் தேங்கி இருந்த பள்ளத்தை சுற்றி மாலையிட்டு யாகம் வளர்த்து பூஜைகள் செய்தனர். இவர்களது இந்த நூதன முறையிலான உத்திக்கு மக்கள் வரவேற்பு  தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்