#Breaking:மேலும்,2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Default Image

ஏற்கனவே 23 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தருமபுரி,பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக,பெரம்பலூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.உயர்நிலை,மேல்நிலை வகுப்புகளுக்கு சூழலைப் பொறுத்து தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,கீழ்க்கண்ட 18 மாவட்டங்களில் இன்று பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறையும்,5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி,

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி,நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம்,திருவாரூர், கள்ளக்குறிச்சி,கடலூர், விருதுநகர்,தென்காசி,தேனி,திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

மேலும்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,அரியலூர்,வேலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல,புதுச்சேரி,காரைக்காலில் இன்றும்,நாளையும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்