#BREAKING: வாகன ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

வாகன விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நா.கனகராஜ் குடும்பத்தாருக்கு ரூ.50லட்சம் நிதியுதவி அறிவிப்பு.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ், இன்று 22-11-2021 காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நா.கனகராஜ். மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜ்  குடும்பத்தாருக்கு எனது ஆழ்த இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan