பரபரப்பு : சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்திய போலீசார்…! சிக்கிய குற்றவாளிகள்..!

Default Image

சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னையில் செயல்படும் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில், காவல்துறையினரின் முறையான உரிமம் மற்றும் முறையான பயிற்சி பெறாமல்  சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடத்த பல ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

இதனையடுத்து, சென்னையில் 151 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடியா சோதனை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் பந்தாடஹி வாங்கிக்கொண்டு பாலியல் தொழிலுக்கு துணை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதில் எதிரொலியாக தான் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில், சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்