பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது…!

Default Image

பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது. 

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் முனைப்புடன் செயல்பட்டு, மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், சென்னையில் தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில்  கொரோனா மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்காக தங்கி இருந்தார். அப்போது வெற்றி செல்வன் என்ற மருத்துவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, அதே விடுதியில் தங்கியிருந்த மற்றோரு பெண் மருத்துவர் தனக்கு மோகன் ராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இரண்டு அரசு மருத்துவர்களையும், தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்