#BREAKING : 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி..!

Default Image

மூன்று விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இந்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம்  நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

  • நமது விவசாயிகளின் வேதனைகளை நேரடியாகவே அறிவேன் அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன்.
  • நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன்.
  • விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014-ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.
  • 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது.
  • வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
  • மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
  • டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் மூன்று விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
  • மத்திய அரசின் 3 வேளாண் திட்டங்கள் இன்று முதல் வாபஸ்; ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்