கடந்த ஒரே நாளில் 10,197 பேர் கொரோனாவால் பாதிப்பு;301 பேர் இறப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 301  ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 10,197 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,66,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 301 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,64,153 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,134 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,38,73,890 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.28% ஆக அதிகரிப்பு.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.527 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,13,68,79,685 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 67,82,042 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்