மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார் …!

Default Image

பத்மவிபூஷண் விருது பெற்ற 99 வயதுடைய மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமானவர் தான் பாபாசாகேப் புரந்தரே. இவர் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமாக மிகவும் புகழ்பெற்றவர். மேலும் 2019 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொண்ணூற்று ஒன்பது வயதுடைய புகழ் பெற்ற எழுத்தாளர் புரந்தரே அவர்கள் புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் வயது முதிர்வு காரணத்தால் மருத்துவ சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த புரந்தரேவின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிர் இழந்தார். பாபாசாகேப் புரந்தரே அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nayinar Nagendran
CM Break fast Scheme
china donald trump
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop