இரவில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…! ரவுடியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..!

Default Image

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில், இரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார். 

மதுரை : மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டிடம் அருகே, ஒரு பெண் நேற்றிரவு நடந்து சென்றபோது, அந்த பெண்ணை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரவுடி குருவி விஜய் மற்றும் கார்த்திக் ஆகியோர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அந்த ரவுடிகள் கட்டை மற்றும் கற்களை கொண்டு போலீசாரை தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலீசார் தங்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து குருவி விஜயை காலில் சுட்டுள்ளனர். போலீசார் சுட்டதில் கீழே விழுந்த அவர் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains