கடந்த ஆட்சியை குற்றம் சொல்லி அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது – ஓபிஎஸ்

Default Image

கடந்த ஆட்சியை குற்றம் சொல்லி, அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. நிலைமையை சரி செய்வோம் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது.

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், வில்லிவாக்கத்தில் வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த ஆட்சியை குற்றம் சொல்லி, அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. நிலைமையை சரி செய்வோம் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. எனவே, திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்