‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ – வேளச்சேரி தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ..!

Default Image

வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார். 

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

 இந்நிலையில்,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலில் எனது வீட்டின் நிலைமையை சரி செய்ய வேண்டும். என் குடும்பத்தை வேறொரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றிவிட்டு வருகிறேன். பின்னர் இங்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்’ என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்