ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதி…!

Default Image

திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றானது உலகையே  ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திராவிட கழகத் தலைவரான கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மேனகாவுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னையில் தனியார் மருத்துவமனையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் அவரது மனைவி மேனகாவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்கள் இருவரும் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்