சென்னையில் கனமழை : மின்சார ரயில் சேவை முடக்கம்…!

Default Image

சென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர் – கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கனமழை காரணமாக, எழும்பூர் – கடற்கரை இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – பூங்காநகர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மின்சார ரயில்களை  நிலவுகிறது. மின்சார ரயில் சேவை பாதிப்புக்குளாகி உள்ளதால் பயணிகள் அவதிக்குளாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்