ஏர்போர்ட்டில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை எட்டி உதைத்த மர்ம நபர்…! நடந்தது என்ன?

Default Image

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்புக்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது எட்டி உதைத்துள்ளார்.இதனால், நிலைதடுமாறிய விஜய்சேதுபதியை, பாதுகாப்புக்கு வந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் விஜய் சேதுபதி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து வந்த மர்ம நபர் விஜய்சேதுபதியை ஆவேசத்துடன் பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார் இந்த சம்பவம் தொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் விசாரித்தபோது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்