இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று…!

Default Image

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO 27001:2013 தரச்சான்று. 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் அவசரகால உதவி எண்களான 100, 112 மற்றும் 101 போன்ற அழைப்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தில் இதுவரை 1.12 கோடி அழைப்பு விவரங்களும், 14.5 லட்சம் காவலன் செயலி பயன்படுவோரின் தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட் இன்ஸ்டிடியூஷன் இந்த நவீன ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பிற்கு ISO 27001:2013 சர்வதேச தர சான்று வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பாட்டிற்கு இந்த சர்வதேச தரசசன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்தில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட ISO 27001:2013 தரச்சான்றை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களிடம் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RCB vs RR - IPL 2025
PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM