#T20WorldCup:சீட்டுகட்டு போல சரிந்த விக்கெட்டுகள் – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 85 ரன்கள் இலக்கு..!

Default Image

T20WorldCup:பங்களாதேஷ் அணி 18.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து  84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன்படி,இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3.30 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.அதன்படி,பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நைம்,லிட்டன் தாஸ் களமிறங்கினர்.

ஆனால்,3 வது ஓவரின் இறுதியில் நைம் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.சௌம்யா சர்க்கார் டக் அவுட் ஆனார்.அதன்பின்னர்,முஷ்பிகுர் ரஹீம்,கேப்டன் மஹ்முதுல்லா களமிறங்கிய நிலையில்,ரஹீம் ரன்கள் ஏதும் எடுக்காமலும்,கேப்டன் மஹ்முதுல்லா 3 ரன்கள் எடுத்தும் வந்த வேகத்திலேயே வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து,களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.நிதானமாக விளையாடிய லிட்டன் தாஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில்,எல்பிடபுள்யு ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின்னர்,ஷமிம் ஹொசைன்,மகேதி ஹசன் களமிறங்கி நிதானமாக அணிக்கு ரன்கள் சேர்த்த நிலையில்,ஷமிம் கேட்ச் கொடுத்து வெளியேற,தஸ்கின் அகமது இறங்கி 3 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

கடைசியில்,நாசூம் அகமது டக் அவுட்டும்,மகேதி ஹசன் 27 ரன்கள் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.இறுதியில்,18.2 ஓவரிலேயே 10 விக்கெட்டையும் இழந்து பங்களாதேஷ் அணி 84 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்