பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு யோகி ஆதித்யநாத் ..!

Default Image

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என  யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை.

கடந்த 24-ம் தேதி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர், உத்தரப்பிரதேச ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் பாகிஸ்தானைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

உத்தரபிரதேசத்தில் 7 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினால் தேசத்துரோக வழக்கு பாயும் என எச்சரித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்