காரில் லிப்ட் கேட்ட 20 வயது இளம்பெண் – கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!

உத்தரபிரதேசத்தில் காரில் லிப்ட் கொடுப்பதாக கூறி 20 வயது இளம்பெண்ணை இரண்டு இளைஞர்கள் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை, அதாவது நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லிப்ட் தருவதாக கூறிய இளைஞர்கள் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த மாணவி காரில் இருந்த இளைஞர்களால்  கடத்தி செல்லப்பட்டு, அருகிலிருந்த ஒரு இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கடத்தி சென்ற இளைஞர்கள் சாகர் மற்றும் பவன்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal