தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

Default Image

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர். 

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கவுதமனுக்கு லதா என்ற மனைவியும், சார் முகிலன் மற்றும் சார் சித்தார்த்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ஒரு மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர் மருத்துவ செலவிற்காக  பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என்று நினைப்பதாகவும்,  அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவரது மனைவியும் மகன்களும் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் மட்டும் பணி செய்யும் படி கூறியுள்ளனர்.

இந்நிலையில் கௌதமன் பணியில் இருந்தபோது கடன் கொடுத்தவர் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் கௌதமன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்  செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்