வெள்ளேரி கிராமசபை கூட்டத்தில் கலந்துரையாடிய பிரதமர் மோடி…!

Default Image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்துரையாடிய பிரதமர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெறும் நிலையில், இக்கூட்டமானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது  வெள்ளேரி ஊராட்சி தலைவர் சுதாவிடம், ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது என்று கூறுவார்கள். குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் பட்டு தறி நெய்வதற்கு நேரம் கிடைக்கும் அல்லவா”  கேட்டறிந்தார்.

மேலும் , நாட்டில் ஏறத்தாழ 2 லட்சம் கிராமங்கள் கழிவுகள் மேலாண்மை முறையை தொடங்கிவிட்டன. 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்துள்ளன. காதி மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஆத்மநிர்பார் நிகழ்ச்சி மூலம் நாடு முன்னோக்கி செல்கிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்