புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்…!

Default Image

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30 ஆம் தேதி) தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 15 ஆண்டுகளுக்கு 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி ,உழவர்கரை பஞ்சாயத்துகளில் அக்.25 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலும், 3-வது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 30 ஆம் தேதி) தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11 ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவடைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்